உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய திருமுறைகளின் தொகுப்பு தேவாரம். * தமிழகத்தில் இருக்கும் ஒரே ஜோதிர்லிங்கத்தலம் ராமேஸ்வரம். * பஞ்சாட்சரம் என்பது 'ஐந்தெழுந்து மந்திரம்'. * படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அதிபதி சிவபெருமான். * 'சிவன்' என்றால் 'மங்கலம் தருபவர்'.* 'அப்பா(சிவன்) நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும். ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு காட்டவேண்டும்' என வேண்டுகிறார் வள்ளலார். * சிவபெருமானைத் தரிசிப்பதற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். * பக்தன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைக் காலால் எட்டி உதைத்தவர் சிவபெருமான். * நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.* தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்.* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை 'திருப்பாட்டு' எனக் குறிப்பிடுவர்.* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.* மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.* பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்.* ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.