கேளுங்க சொல்கிறோம்
ஆர்.பிரபு, கள்ளிக்குடி, மதுரை.*சாப்பிட்டதும் இலையை மூடலாமா...சுபநிகழ்ச்சியின் போது இலையை மூடக் கூடாது. அசுப நிகழ்ச்சியில் மூடலாம். வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.*திருநீறை எந்த திசை நோக்கி பூச வேண்டும்?காலையில் கிழக்கு நோக்கியும் (மதியம் 12:00 மணி வரை), மற்ற நேரத்தில் வடக்கு நோக்கியும் பூச வேண்டும். எஸ்.வினிதா, மடிவாலா, பெங்களூரு.*சுமங்கலி பிரார்த்தனைக்கான ஸ்லோகம் என்ன? மங்களே மங்களா தாரே மாங்கல்யே மங்கலப்ரதே|மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா||ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.*என்றும் பதினாறு என வாழும் மார்க்கண்டேயரின் பெற்றோர் யார்?தாயார் மருத்துவதி. தந்தையார் மிருகண்டு முனிவர். டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*யாருடைய கண்ணீரை பார்க்கக் கூடாது?பிள்ளைகளின் கண்ணீரை பெற்றோர், பெற்றோரின் கண்ணீரை பிள்ளைகள் பார்க்கக் கூடாது. ஒருபோதும் இதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர். பி.மைதிலி, ஜனக்புரி, டில்லி.*புராணங்கள் மொத்தம் எத்தனை?18. வியாசரால் இயற்றப்பட்ட இதை 'பதினெண் புராணங்கள்' என அழைக்கிறோம். எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.*மறந்தும் பிறன்கேடு சூழற்க என்பதன் பொருள் என்ன?மனதாலும் ஒருவருக்கு தீங்கு நினைக்க கூடாது. மீறினால் தர்மதேவதையால் தண்டிக்கப்படுவீர்கள்.வி.ராஜன், மேலப்பாளையம், திருநெல்வேலி.*பிறவிக் குணங்கள் எவை?காமம், குரோதம். அதாவது ஆசை, கோபம். இவை இரண்டையும் ஒழிக்க முடியாது. குறைக்கலாம். கே.மணிவண்ணன், அனுப்பர்பாளையம், திருப்பூர்.*இசையின் பெற்றோர் யார்?ஸ்ருதியை மாதா என்றும், லயத்தை பிதா என்றும் குறிப்பிடுவர். தடுமாற்றம் இல்லாமல் ஸ்ருதி ஒலிக்க வேண்டும். தாளத்திற்கு ஏற்ப இசை செல்ல வேண்டும். எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.*பெரியவர், துறவிகளை வணங்கும் போது காலை தொட்டு வணங்கலாமா?தேவையில்லை. கை குவித்து வணங்கினால் போதும்.