உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

வி.கவிதா, திருப்புவனம், சிவகங்கை.*மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?யக்ஷி, தமீ என்னும் தெய்வங்களை வழிபடுவதற்காக மணமேடையின் வடகிழக்கு மூலையில் பந்தல்கால் நடுகிறோம். இவர்களை வழிபடும் மணமக்கள் நலமுடன் வாழ்வர். கே.ரதி, சென்னை.*பறவையைக் கூண்டில் வளர்த்தால்...பறவையைக் கூண்டில் வளர்த்தால் தோஷம் ஏற்படும். ஆர்.அனிதா, மடத்துக்குளம், திருப்பூர்.*ஒருமுக ருத்திராட்சத்தை யார் அணியலாம்?எல்லோரும் அணியலாம். ருத்திராட்சம் அணிந்தவர்கள் திருநீறு பூசி, சிவாயநம என சொன்னால் இந்தியாவுக்கே நன்மை சேரும். வி.கீதா, ஏரல், துாத்துக்குடி.*கர்ப்ப கிரகத்தில் எத்தனை முக தீபம் ஏற்றலாம்?ஐந்துமுக தீபம் ஏற்றுவது சிறப்பு. எஸ்.துரைச்சாமி, குளச்சல், கன்னியாகுமரி.*நல்லவர்களின் லட்சணம் என்ன?உண்மை, நேர்மை, சுயஒழுக்கம், தர்மசிந்தனை உள்ளவர்களே நல்லவர்கள். எம்.வைசாலி, காஞ்சிபுரம்.*தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாதாமே ஏன்?தென்திசையின் அதிபதி எமன். முன்னோர்களின் பிதுர்லோகம் இருப்பதும் அங்குதான். அதனால் கிழக்கு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றுங்கள். எம்.வினோதினி, பெங்களூரு.*செய்த உதவியை பிறரிடம் சொல்லக் கூடாதா... பிறரிடம் இதை சொன்னால் அதற்கான புண்ணியம் நம்மை விட்டு விலகும். எம்.பிரசாந்த், கல்லுப்பட்டி, மதுரை.*பணத்தாசையால் சிலர் அலைகிறார்களே...பணத்தை சம்பாதிக்கவும் வேண்டும். அதே சமயம் தர்மமும் செய்ய வேண்டும். பணத்தாசை பிடித்தவர்கள் நிம்மதியை இழப்பர். எம்.கோகிலா, பப்பன்கிளேவ், டில்லி.*ஒரே நாளில் இரண்டு துக்க வீட்டிற்குச் செல்லலாமா...கூடாது. முடியாத சூழலில் முதல் வீட்டில் துக்கம் விசாரித்து வந்ததும் குளியுங்கள். பிறகு அடுத்த வீட்டிற்கு சென்று திரும்பியதும் மீண்டும் குளியுங்கள். சி.அவினாஷ், சிதம்பரம், கடலுார்.*கோயிலுக்குள் இறப்புச் செய்தியைக் கேட்டால்...துக்க செய்தியை கேட்டதும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுங்கள். (கோயிலுக்குள் அலைபேசி தேவையா)