கேளுங்க சொல்கிறோம்
வே.ஹேமா, முகுந்தநல்லுார், விருத்தாச்சலம்.*பசுவும் கன்றும் எதிரில் வந்தால்...இதை பார்ப்பது நல்ல சகுனம். நினைத்தது நிறைவேறும். கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதுார், கன்னியாகுமரி.*சரியை, கிரியை வேறுபாடு என்ன?கோயிலை துாய்மைப்படுத்துதல், பூக்கள் தொடுத்து பூஜைக்கு கொடுத்தல் போன்ற செயல்கள் சரியை. மந்திரம் ஜபித்தல், தியானம், தவம் முதலியன கிரியை. வி.கந்தன், மானுார், திருநெல்வேலி.*அரசமரத்தை அகற்றி விட்டு மண்டபம் கட்ட விரும்புகிறோம். செய்யலாமா...வழிபாட்டில் உள்ள அரச மரத்தை வெட்டக் கூடாது. வழிபடாத மரமாக இருந்தால் பரிகாரமாக பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பின் வெட்டலாம். அதை கோயிலுக்கு தானமாக கொடுங்கள். அ.காமாட்சி, திருமுருகன்பூண்டி, திருப்பூர்.*ஜுரதேவருக்கு மிளகு ரசம் படைப்பது ஏன்?மிளகு ரசம் படைத்து வழிபட ஜுரம் நீங்கும். மனம், உடல் பலம் பெறும். க.பரணிபாரதி, ஆவடி, திருவள்ளூர்.*கோயில் சுவருடன் ஒட்டிய வீட்டில் குடியிருக்கலாமா?குடியிருக்க வேண்டாம். கோயில் சுவரை ஒட்டி வீடு கட்டக்கூடாது. இதுவும் ஆக்கிரமிப்பால் நேரும் தவறுதான். எஸ்.ராமரத்தினம், சோழவந்தான், மதுரை.*முதுமையால் திருப்பதி செல்ல முடியவில்லை. நேர்த்திக்கடனை எப்படி செலுத்துவது?காணிக்கையை யார் மூலமாவது செலுத்துங்கள். முடி காணிக்கை செலுத்த வேண்டி இருந்தால் பெருமாள் கோயிலில் செலுத்தி விட்டு, திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொள்ளுங்கள். எம்.முத்துக்குமார், டில்லி.*காசியில் வாங்கிய ஸ்படிக லிங்கம் உடைந்து விட்டது. என்ன செய்யலாம்?சிறியதாக உடைந்திருந்தால் சரிசெய்து பூஜிக்கலாம். முடியாவிட்டால் புதிய லிங்கம் வாங்கி பூஜியுங்கள்.எஸ்.ரவி, ராமமூர்த்திநகர், பெங்களூரு. *சிலர் விபூதியை பூச்சிக்கடிக்கு பூசுகிறார்களே...'நோய் தீர்க்க வல்லது திருநீறு' என்கிறது திருநீற்றுப் பதிகம். பசுவின் சாணத்தில் செய்த திருநீறு மருந்தாகவும் உள்ளது. எஸ்.நடராஜன், திருப்புவனம், சிவகங்கை.*கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டில் சேர்த்து வைக்கலாமா?சேர்த்து வைக்கலாம். குடும்பத்தினர் அனைவரும் தினமும் நெற்றியில் பூசுவது மிக அவசியம். ஏ.பரசுராம், கோடம்பாக்கம், சென்னை. *புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடலாமா...புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடுவது புண்ணியம். கோயில் கட்டுவது சிறப்பு.