மனப்பாடப்பகுதி
UPDATED : ஏப் 26, 2019 | ADDED : ஏப் 26, 2019
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டிஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்மாணிக்குறளனே! தாலேலோ!வையம் அளந்தானே! தாலேலோ!(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!