உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.(திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)பொருள்: சிறந்த பெண்மணியான பார்வதியுடன் சீர்காழியில் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். கண்ணிற்கு இனியதும், வளம் மிக்கதுமான இத்தலத்தில் வழிபடுவோருக்கு பூமியில் நலமுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும். குறையேதும் உண்டாகாது. முக்தி இன்பம் கிடைக்கும்.