மனப்பாடப்பகுதி
UPDATED : மார் 20, 2020 | ADDED : மார் 20, 2020
துாயவன் துாயவெண்ணீறு மேனிமேல்பாயவன் பாயபைஞ்ஞீலி கோயிலாமேயவன் வேய்புரை தோளி பாகமாஏயவன் ஏனைசெயுந் தன்மை என்கொலோபொருள்: துாய்மையின் இருப்பிடமே! வெண்மையான திருநீற்றினை மேனியில் பூசியிருப்பவனே! பசுமையான வாழை மரங்கள் நிறைந்த திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தை கோயிலாகக் கொண்ட சிவனே! மூங்கிலைப் போன்ற தோள்களைப் பெற்ற பார்வதியை தன் மேனியில் பாகமாகக் கொண்டவனே! நீ என்னை ஆட்கொண்ட தன்மையை என்னவென்று சொல்வேன்?