மனப்பாடப்பகுதி!
UPDATED : ஏப் 25, 2014 | ADDED : ஏப் 25, 2014
தண்ணார் திங்கள் பொங்கு அரவம் தாழ்புனல் சூடிப்பெண் ஆண் ஆயபேர் அருளாளன் பிரியாதகண்ணார் கோயில் கைதொழு வோர்கட்கு இடர்பாவம் நண்ணா ஆகும் நல்லினை யாய நல்குமே.பொருள்: குளிர்ந்த நிலவு, பாம்பு, பெருகியோடும் கங்கை ஆகியவற்றை சூடிய சிவனே! அம்மையப்பராக விளங்கும் அருளாளனே! கை கூப்பி வணங்குவோரின் பாவத்தை போக்கி நன்மையை அருள்பவனே! கண்ணார்கோயில் என்னும் குறுமாணக்குடியில் வீற்றிருப்பவனே! அருள்புரிவாயாக.குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கண்ணார்கோயில் உள்ளது.