மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜூன் 23, 2015 | ADDED : ஜூன் 23, 2015
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகிஅற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்சிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.பொருள்: கற்பனைக்கு எட்டாத ஜோதி வடிவானவரே! கருணை மிக்கவரே! அற்புத அழகு கொண்டவரே! அரிய வேதங்களால் தாங்கப்படுபவரே! சிற்றம்பலமாகிய தில்லையில் வீற்றிருப்பவரே! பொன்னம்பலத்தில் நடனம் புரிபவரே! உமது மலர்ப் பாதத்தை போற்றி வணங்குகிறேன். குறிப்பு: சேக்கிழாரின் பெரியபுராணத்தில் உள்ள பாடல்