உள்ளூர் செய்திகள்

குறையொன்றுமில்லை...

குலசேகராழ்வார் பாடலைப் பாடினால் குறை தீரும்.தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லைவிரை குழவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானேஅரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீகொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனேமீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்-பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்-வேந்தன்கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே வெங்கண் திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானேஎங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனேசெந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே.எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே.தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து ஓடித் தொடுகடலேபுக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல்மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே.நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானேநின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்துகொற்ற வேல்-தானைக் குலசேகரன் சொன்னநற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே.