உள்ளூர் செய்திகள்

நட்சத்திர நாயகன்

ராசி பலனை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பலர். பூர்வஜென்ம பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்கிறது ஜோதிடம். ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. 'கந்தர் அலங்காரம்' நுாலில், முருகனை வழிபடுபவர்களை 'நாளும் கோளும்' நன்மை செய்யும் எனக் கூறுகிறது.''நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகம் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.