வயிற்று வலியா... போயே போச்சு!
UPDATED : ஆக 26, 2019 | ADDED : ஆக 26, 2019
கடலுார் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் பாடிய இப்பாடலை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்கூற்றாயின வாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தன நான் அறியேன்ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாது என் வயிற்றின் அகம்படியேகுடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன் அடியேன் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகி வந்தென்னை நலிவதனைநணுகாமல் துரந்து கரந்தும் இடீர்அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்படுவெண்டலை யிற்பலி கொண்டு உழல்வீர்துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்பெற்றம் ஏற்றுகந் தீர்சுற்றம் வெண்டலைகொண்டுஅணிந்தீர்அடி கேள் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.முன்னம் அடியேன் அறியாமையினால்முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடியேன்உமக்கு ஆளும் பட்டேன்சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோதலையாயவர்தம் கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே.காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லிநீத்தாய கயம்புக நுாக்கியிடநிலைக் கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்வயிற்றோடு துடக்கி முடக்கியிடஆர்த்தார் புனல் ஆர்அதிகைக்கெடிலவீரட்டானத்துறை அம்மானே.சலம்பூவொடு துாபம் மறந்தறியேன்தமிழோடிசை பாடல் மறந்தறியேன்நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்உலந்தார் தலையில்பலி கொண்டு உழல்வாய்உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்அலந்தேன் அடியேன் அதிகைக் கெடிலவீரட்டா னத்துறை அம்மானே.உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்ஒருவர் தலை காவல் இலாமையினால்வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேஎன் வயிற்றின் அகம்படியேபறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திடநான்அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச்சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்கலித்தே யென் வயிற்றின் அகம்படியேகலக்கிமலக் கிட்டுக் கவர்ந்து தின்னஅலுத்தேன் அடியேன் அதிகைக்கெடிலவீரட்டானத்துறை அம்மானே.பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்துன்பே கவலை பிணி என்று இவற்றைநணுகாமல் துரந்து கரந்தும்இடீர்என்போலிகள் உம்மை இனித் தெளியார்அடியார் படுவது இதுவே யாகில்அன்பே அமையும் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல்புறங்காடு அரங்காநடம் ஆடவல்லாய்ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக்கீழ்அடர்த்திட்டருள் செய்த அது கருதாய்வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்என் வேதனை யான விலக்கியிடாய்ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடிலவீரட்டானத்துறை அம்மானே.