சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : மார் 12, 2020 | ADDED : மார் 12, 2020
* மனைவி கருவுற்றிருக்கும் போது கணவன் கடலில் குளிக்கவோ, மலைத் தலங்களுக்கு செல்வதோ கூடாது.* குளிக்கும் முன் நெற்றியில் சந்தனம் இடக்கூடாது.* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று முகச்சவரம் செய்ய வேண்டாம்.* சதுர்த்தி திதியன்று இரவில் நிலாவை தரிசிக்கக் கூடாது. * மாலையில் சூரியன் மறையும் நேரம், இரவில் வீட்டை பெருக்கக் கூடாது.* ஆண்கள் தங்களின் பிறந்த தமிழ் மாதத்தில் திருமணம் நடத்தக் கூடாது.* எமகண்டத்தில் சுபச் செயல்களை தொடங்கவோ, வெளியூர் புறப்படவோ கூடாது.* விளக்கேற்றிய பின்னர் பணம், பொருளை கடன் கொடுக்கக் கூடாது.* எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டக் கூடாது.