உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து வழிபடுவது நல்லது. துளசி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள், தொற்று நோய் கிருமிகள் அண்டாது. * ஒருவன் தன்னுடைய வருமானம், நோய், கடன் பிரச்னையை அவசியம் இல்லாத போது மற்றவரிடம் சொல்வது கூடாது. * செவ்வாய் தோறும் முருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி, ஆறு ஏழை குழந்தைகளுக்கு அன்னமிட்டு வர சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். * கடுமையான உழைப்பே வெற்றியின் திறவுகோல்; பணிவுடன் நடத்தலே நிம்மதியின் ரகசியம். * பெண்கள் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.* கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கவோ, தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவோ கூடாது.* வருமானம் இல்லாத காலத்தில் தர்மம் செய்தால் அது தீமையை ஏற்படுத்தும்.* ஆபத்துக்கு உதவாத பிள்ளை, பசிக்கு உதவாத உணவு, வறுமை தெரியாமல் அதிக செலவு செய்யும் மனைவி, ஆசிரியரின் சொல் கேட்காத மாணவன், பாவத்தை போக்காத தீர்த்தம் அனைத்தும் பயன் இல்லாதவை. * நோயின்றி நலமுடன் வாழ்பவனே உண்மையான செல்வந்தன். * சூரியன், சந்திரன், குரு, சுக்கிர தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டால் கெடுபலனில் இருந்து தப்பலாம்.