சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர்.* நள்ளிரவு 12:00 மணிக்கு மதுராவிலுள்ள சிறைச்சாலையில் வசுதேவர் - தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்தார். * கர்கமுனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. * தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார். * பாகவதம் என்னும் நுாலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது.* பாகவதத்தின் பத்தாம் காண்டம் 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என போற்றப்படுகிறது. * கிருஷ்ணரின் ஜாதக விபரம் கமானிக்யா என்னும் நுாலில் உள்ளது. * கிருஷ்ணர் ஏழாம் வயதில் அசுரனான கம்சனை வதம் செய்தார். * அகாசுரன் என்பவன் பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். * கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய ஸ்தோத்திரம் பஜகோவிந்தம். * கிருஷ்ண ஜெயந்தி பூஜையை இரவு ௭:௦௦ மணிக்கு செய்வது விசேஷம். * கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்வர். * 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்பது கிருஷ்ணருக்குரிய மந்திரம். * கிருஷ்ண அவதாரம் முடிந்த பிறகே பூமியில் கலியுகம் தொடங்கியது.