உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யும் பொழுது வெற்றிலையையோ, பாக்குகளையோ 1,3,5,7 என ஒருமை எண்ணிக்கையில் வைக்கக்கூடாது. * மணியடிக்கும் ஓசையில்லாமல் எந்தவொரு பூஜையையும் செய்யாதீர்கள். * விரத காலத்தில் வெற்றிலை பாக்கு தரித்தல் கூடாது. * வீட்டு வாசலில் தெருவைப் பார்க்குமாறு மகாவிஷ்ணு, மகாலட்சுமி படங்களை மாட்டாதீர்கள்.* பூஜையறையில் தெய்வத்தின் படங்கள், குத்துவிளக்குகளில் எலக்ட்ரிக் ஒயர்களால் அலங்காரம் கூடாது. * சனீஸ்வரரின் படத்தையோ, விக்ரஹத்தையோ வீட்டில் பூஜிக்கக்கூடாது.* விளக்கில் முதலில் போதுமான எண்ணெய்யை ஊற்றியபிறகே விளக்கேற்ற வேண்டும். * மண்ணில் செய்த அகல், வெள்ளி, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு உகந்தது. * ஒருவர் சூடிய பூவை மற்றொருவர் சூடக்கூடாது. * வெள்ளிக்கிழமை அன்று அரிசி புடைப்பது, அரிசி வறுப்பது, மிளகாய் வறுப்பது, மிளகாய் பொடி அரைப்பது கூடாது. * கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கவோ, தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவோ கூடாது.