உள்ளூர் செய்திகள்

அன்பை வாரி வழங்குங்கள்

நவ.23 - சாய்பாபா பிறந்த நாள்* அனைவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள். பொறுமை உள்ளவனே சிறந்த மனிதன். சாதிக்க முடியாததையும், பொறுமை சாதித்து காட்டும்.* பிறர் பாராட்டும்போது பெருமிதமோ, திட்டும்போது வருத்தமோ கொள்ளாதீர்கள்.* பக்தி தோன்றும்போது தான், சமூகம் முழுமை பெறுகிறது. ஒவ்வொருவரும் பக்தி என்னும் மாபெரும் சக்தியின் அங்கமாக இருக்கின்றனர்.* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் பெருமை இருக்கும். அன்பு இருக்கும்இடத்தில் நிசப்தம் மட்டுமே இருக்கும்.* இளமைப்பருவம் வாழ்வில் மிக முக்கியமான அங்கம். அவ்வேளையில் ஒருவனை சரியான வழிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உரியது.* உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை தியானம் செய்வதற்கும், பிறருக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்துங்கள். அந்நேரத்தில் பயனற்ற செயல்களை செய்யாதீர்கள்.* எதிர்பார்ப்பு, பேராசை பெரும் துன்பத்தை தரும். மனநிறைவுடன் வாழ இவ்விரண்டையும் விட்டுவிடுங்கள்.* நாம் செய்யும் நற்செயல், தீய செயல்களுக்கேற்ப எதிர்காலத்தில் பலனையும் அனுபவிப்போம்.* சாப்பிடும் உணவு உடலின் அனைத்து பகுதிக்கும் சக்தி தருவதுபோல, தனி மனித அமைதியே முழு உலகத்திற்கும் பரவி சக்தி கொடுக்கிறது.* கடவுள் அனைவரிடமும் இருக்கிறார். எனவே நீங்கள் பிறருக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.* நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? இந்த மூன்று கேள்விக்கும் 'கடவுள்' என்ற ஒரு வார்த்தை மட்டுமே பதிலாக இருக்கும்.* மனிதராகப் பிறந்தது, பக்தியின் மூலமாகஇறைவனை அடைவதற்காகத்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.* அனைவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் மனிதரே நல்லறிவு கொண்டவர்.* சேவை செய்வதன் மூலம், பிறர் மீது அன்பை வெளிப்படுத்துவதோடு, அதை பல இடங்களிலும் பரவவும் உதவுகிறோம்.* கருத்தை வலியுறுத்தி சத்தமிடுவதால் பயனில்லை. வாதத்தை சரியாக வைத்தால் மட்டுமே கருத்தை நிலை நிறுத்த முடியும்.* பசி போக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. வெறும் தத்துவங்கள் பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை.* அமைதியாக இருப்பவர்களுக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒரு நிலையிலேயே இருப்பர்.வேண்டுகிறார் சாய்பாபா