உள்ளூர் செய்திகள்

ஒளிமயமான எதிர்காலம் உண்டு

* சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்தால், உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. * விநாயகரை வணங்கு. நல்ல மனமும் லட்சுமியின் கடாட்சமும் உண்டாகும்.* உயிர் பிரியும் போது பணம் உன்னுடன் வராது. எனவே பணத்தை வைத்து தர்மம் செய். * பிறருக்கு செய்த சிறு உதவி கூட, நிச்சயம் ஒரு நாள் உனக்கு பலன் தரும். * இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே மிஞ்சும்.* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் உன்னிடம் சேராது.* வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா. அதுபோல் நல்லது செய்யாமல் கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன். * 'சிவாய நம' என்று தினமும் சொல். இந்த ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் வழியாகும். * நீ என்னதான் முயன்றாலும் தகுந்த காலம் கூடினால் மட்டுமே, உன் செயலுக்கு பலன் கிடைக்கும். * முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு ஏற்பவே, தற்போது உன்னிடம் செல்வம் உள்ளது. * நல்ல குணமுள்ள மனைவி அமைந்து விட்டால் உனக்கு வேற எதுவும் தேவையில்லை. * நீ செய்த புண்ணியத்தின் படியே முயற்சியில் வெற்றி பெறுவாய். * பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாதே. * சாப்பிட நாழி அரிசி சோறும், உடுக்க நான்கு முழமும் போதும். ஆனால் நாம் ஆசைப்படுவதோ கோடி விஷயம். என்கிறார் அவ்வையார்