உள்ளூர் செய்திகள்

புண்ணியத்தை தேடுங்கள்

* நல்ல செயல்களை செய்து, புண்ணியத்தை தேடிக்கொள்.* நல்ல மனதுடன் இரு. மனிதர்களும் நல்லவர்களாகவே தோன்றுவர். * பிறருடன் அன்பாக நடந்துகொள். அதுதான் நல்ல குணம். * துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு. * முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம். * நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய். * கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் உனக்கு செய்வார். * சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்பட்டால், மனதில் தீய எண்ணமே வராது. * எப்போதும் பண விஷயத்தில் நம்பிக்கையுடன் இரு. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. அவரை சரணடைந்தால் பாவம் தீரும். * 'போதும்' என்ற மனதுடன் இருந்தால், அமைதியான வாழ்க்கை உண்டு. * பக்தி இருந்தால் முடியாத செயலையும் முடிக்க முடியும். * கோபப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது பெண்களுக்கு அழகு. * மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் நினைத்தது கைகூடும். * பிறர் மீது குற்றம் சொல்லாதே. மீறி சொன்னால் அதுவே உன் இயல்பாகிவிடும். * கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். * மனம் என்பது மதம் பிடித்த யானை போன்றது. அதை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திரு.சொல்கிறார் சாரதாதேவியார்