உள்ளூர் செய்திகள்

எண்ணத்தை வைத்தே எதிர்காலம்

* உங்களது எண்ணத்தை வைத்தே எதிர்காலம் நிர்ணயமாகிறது. * பறவை, விலங்குகளிடம் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். * கற்பனை பயத்திற்கு இரையாகி விடாதீர். * மன நிதானத்தை இழக்காதீர். அது அறிவை இழப்பதற்கு சமம். * உங்களது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கட்டும். * சென்றதை நினைத்து வருத்தப்படாதீர். வாழ்க்கையை புதிதாக தொடங்குங்கள். * மனநிறைவே பெரும் செல்வமாகும். * வாழ்க்கையும், நேரமும் விலை மதிக்க முடியாதது. * தெய்வீக எண்ணத்தால் உங்களது மனதை நிரப்புங்கள். * உங்களது செயலே பிரச்னைக்கு காரணம்.* உண்மை, பொய்யை பிரித்து அறிய கற்றுக்கொள்ளுங்கள். * கடவுள் உங்களை சோதிக்கிறாரா... கவலைப்படாதீர். அவர் அருள்புரிய போகிறார். * அறிவை விட பக்தியே சிறந்தது. * உங்களை அறிந்தால் நீங்கள் விரும்பியதை பெறலாம். * உண்மையாக இருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். * வாழ்க்கை சிறியது. காலமோ பெரியது. * நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர். என்கிறார் சிவானந்தர்