உள்ளூர் செய்திகள்

இதுவே திருமந்திரம்

* 'ஓம் நமோ நாராயணாய' என மூன்று பதங்களைக் கொண்டது திருமந்திரம்.* பெருமாள் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களுக்கு இயன்ற உதவிகளை செய். * உலகியலைச் சார்ந்த பற்றினைக் கைவிடு. * பெருமாளுக்கு நிவேதனம் செய்த உணவுகளை சாப்பிடு. அதுவே சிறப்பு. * ஆழ்வார்கள் அருளியுள்ள வேதத்துக்கு ஒப்பான திவ்யப்பிரபந்தங்களை படி. * பெருமாளே பரம்பொருள் எனத் தெளிந்து, அவரிடம் பக்தி செலுத்து. * எந்தவொரு செயலையும் பலனை எதிர்பார்த்து செய்யாதே.* உடலே ஆத்மா என எண்ணாதே. சரீரம் வேறு. ஆத்மா வேறு. * பெருமாளின் திருவடிகளில் சரணடைந்தவருக்கு துன்பம் இல்லை. * புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். * அற்ப விஷயங்களில் ஆசை வைக்காதே. * எப்போதும் பிறரை குறை கூறுபவர்களிடம் சேராதே. * ஆசார்யார்களை சராசரி மனிதராக எண்ணாதே. * ஞானம் நிறைந்த பெரியவர்களை பார்த்தால் உடனே வணங்கு. * 'நாம் பெருமாள் அடியார்களுக்கு அடிமை' என்ற உணர்வோடு செயல்படு. * வைஷ்ணவர்களுடைய பிறப்பை பற்றி ஆராயாதே. அது கொடிய பாவமாகும்.சொல்கிறார் ராமானுஜர்