உள்ளூர் செய்திகள்

கல்லை கனியாக்கியவர்

கல்லா மனத்துக்குக் கடைப்பட்ட நாயேனைவல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணைவெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும்ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானாய்நானோ ஞானம் பெறாதவன். நாயை விட கேவலமானவன். சிவபெருமானோ எல்லா வல்லமையும் பெற்றவர். திருப்பெருந்துறையை ஆள்பவர். ஆனால் அருள் என்னும் பித்தேறச் செய்து என்னை ஆட்கொண்டார். கல்லாக இருந்த மனதைக் கனியாக மாற்றினார். கருணை வெள்ளத்தில் மூழ்கச் செய்து தீவினையைப் போக்கினார். சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கிறார். பாய்ந்து செல்லும் காளையில் பவனி வரும் அவரது புகழைப் போற்றி அம்மானை ஆடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். அம்மானை என்பது பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு.