திருப்பம் உருவாக...
UPDATED : ஜூன் 12, 2025 | ADDED : ஜூன் 12, 2025
விருப்பம் போல வாழ்வு அமையவே விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் எண்ணமும், வாழ்வும் ஒன்று சேர்வதில்லை. அதனால் கிடைத்ததை கொண்டு சமாதானத்துடனோ அல்லது ஏக்கத்துடனோ மனிதனின் வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் நல்ல திருப்பம் வராமலா போகும் என்ற நம்பிக்கையுடன் நாம் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். இந்நிலையில் நமக்கு கை கொடுத்து உதவுபவராக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். 12 வாரம் சனிக்கிழமையன்று விரதமிருந்து வீட்டில் அல்லது அருகிலுள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றினால் வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.