சமயபுரத்தாள்
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பங்குனி 17 - சித்திரை 13 வரை 28 நாள் உணவு படைப்பதில்லை. இந்நாட்களின் தன் பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதமாக இருக்கிறாள். இளநீர், மோர் மட்டுமே படைப்பர். 1706ல் தொடங்கிய திருப்பணி 26 ஆண்டுகளாக நடந்து 1732ல் திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இக்கோயிலைக் கட்டினார்.