வேதத்தின் சாரம்
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
திருப்பாவை என்பதே ஒரு யாகம். வேதத்தின் சாரத்தையே திருப்பாவையாக்கி தந்திருக்கிறாள் ஆண்டாள். அஸ்வமேத யாகம் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். மழைக்குரிய யாகம் செய்தால் மழை பெய்யும். புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருப்பாவையின் முப்பது பாடல்களையும் பாடினால் எல்லா யாகமும் நடத்திய பலன் கிடைக்கும். ஏனெனில் அனைத்து யாகத்திற்கு உரிய மந்திரத்தின் உட்பொருளும் இதில் அடங்கியிருக்கிறது.