மந்திரம் சொல்லும் சேதி
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
முன்னோர் நற்கதி பெறவும், அவர்களின் ஆசி வேண்டியும் சந்ததியினர் சிராத்தம் செய்கின்றனர். அப்போது சொல்லும் மந்திரத்தின் பொருள் இது. இறப்புக்கு பின்னும் வாழ்வு தொடர்கிறது என்பதை உணர்த்தும் வழிபாடு இது. ''கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில்... ஆண்டில்... அயனத்தில்... ருதுவில்... மாதத்தில்... பட்சத்தில்... திதியில்... வாரத்தில்... நட்சத்திரத்தில் எனது பெற்றோரான... பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சிந்திப்பதன் பொருட்டு, அவரது மகனாகிய நான் சிராத்தம் செய்கிறேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்க வேண்டுகிறேன்'' என்பதாகும்.