உள்ளூர் செய்திகள்

சோத்துக்குள்ள சிவலிங்கம்

ஐப்பசி பவுர்ணமி சிவனுக்குஉரிய நல்ல நாள். இந்த நாளில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவருக்கு வாழ்வில் உணவு எப்போதும் கிடைக்கும். அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். திருச்சியில்இருந்து 110 கி.மீ.,ல் உள்ள இங்கு மூலவர் லிங்கம் பதிமூன்றரை அடி உயரம் கொண்டது. இதற்கு அபிஷேகம் செய்ய நூறு மூடை அரிசியை சமைப்பர்.சோழர் காலத்தில் நடந்த இந்த அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்தது.காஞ்சிப்பெரியவரின் வழி காட்டுதலால் மீண்டும் தொடங்கப்பட்டது. காலையில் தொடங்கும் அபிஷேகம் மாலை வரை நடக்கும். மூலவரை முழுமையாக அன்னத்தால் அலங்கரிப்பர். அப்போது, சுவாமியின் மீது இருக்கும் ஒவ்வொருசோற்றிலும் சிவலிங்கம் இருப்பதாக பாவித்து வழிபடுவர். எல்லா உயிர்களுக்கும் இந்த உணவை வழங்குவர். புளி ரசம் சேர்த்து பக்தர்களுக்கும் கொடுப்பர்.