இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்
UPDATED : அக் 20, 2017 | ADDED : அக் 20, 2017
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.