உள்ளூர் செய்திகள்

பிள்ளைக்கு தரும் பரிசு

இறைவன் கூறுகின்றான்:* ''வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''திருக்குர்ஆன்(17:31)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:* ''ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்''(நூல்: அபூதாவூத்)* '' உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!''(நூல்: அபூதாவூத்)* ''தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே!''(நூல்: திர்மிதி)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)