உள்ளூர் செய்திகள்

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

* எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.* எங்களுக்கு நீ (இறைவன்) நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.* வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித்திரிந்து பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.* இஸ்லாம் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிதல், அமைதி என்று பொருள். இறைவனுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும் என்பதே அதன் கருத்தாகும்.-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து