உள்ளூர் செய்திகள்

இருப்பதில் திருப்தியாக இரு!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இருவிஷயங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.பொருளின் மீது பேராசை, வயதின் மீது பேராசை.* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.* இருவிஷயங்கள் ஒருவனிடமிருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை மிக்கவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான்.* உலக வசதிகளைப் பொறுத்தவரையில் தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள். அதுவே என்றும் அழியாத செல்வமாகும்.* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். (வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)