உள்ளூர் செய்திகள்

அனைவரிடமும் அன்பாயிருங்கள்!

நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்: * ''படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்'' (நூல்: பைஹகி)* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.(நூல்: திர்மிதி)* நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.* நபித்தோழர்கள்: நாங்கள் ஒவ்வொருவரும் அன்பு செலுத்துபவர்களாகவே உள்ளோம்.* நபிகள் நாயகம்(ஸல்): அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும். (நூல்: பத்ஹுல் பாரி)* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை. (நூல்: பைஹகி)* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாதவரையில் நீங்கள் உண்மையுள்ள இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது. (நூல்: முஸ்னத் அஹமத்)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)