தர்மம் மனிதனின் கடமை
UPDATED : ஜன 20, 2013 | ADDED : ஜன 20, 2013
* பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நல்லறிவை நாடிச் செல்லுங்கள். * அறிவைத் தேடி அடைந்தவர்கள் இரு பரிசுகளைப் பெறுகின்றார்கள். ஒன்று அறிவை நாடியதற்காக; மற்றொன்று அதை அடைந்ததற்காக.* நண்பர்களுக்கும், அறிமுகமில்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லுங்கள். * உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி அனுப்பப்படும். அப்போது நீங்கள் பெறுகின்ற தண்டனை, நீங்களே வரவழைத்துக் கொண்டதாகும்.* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.* உங்களை விடச் செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.* அறியாமையை விடக் கொடிய வறுமை கிடையாது.* தர்மம் செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். - நபிகள் நாயகம்