உள்ளூர் செய்திகள்

இறைவனையே சார்ந்திருங்கள்

* இறைவன் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான்... படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே!* யாரேனும் இறைவனுக்கு அஞ்சி (யவண்ணம் செயல்படுவாரா) னால் இறைவன் அவருக்கு (சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு) ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் இறைவனையே முழுவதும் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு இறைவன் போதுமானவன். * இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறிய மாட்டார்.* நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கிறான். பின்னர் மறுமுறையும் அவனே படைக்கின்றான். ஏனெனில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!* உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் இறைவன் உங்களிடம் அவை பற்றிக் கணக்கு கேட்பான்.(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)