உள்ளூர் செய்திகள்

நம்பியவரைக் கைவிடாதீர்!

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.* மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற்காகவே அல்லாமல், இறைவன் உங்கள் மீது ஜகாத்தைக் கடமையாக்கவில்லை.* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும்.* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் பிள்ளைகளை நல்ல விதமாக நடத்தட்டும்.* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால் அதை அடைக்கலப் பொருளைப் போல் பாதுகாத்து வையுங்கள்.* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.- நபிகள் நாயகம்