மகத்தானது மன்னிப்பு
UPDATED : ஜூன் 24, 2012 | ADDED : ஜூன் 24, 2012
* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். * முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* ஒருவன் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கும்போது அவனை மன்னித்து விடுகின்றவன் இறைவனுக்கு மிகவும் அருகில் இருப்பான்.* நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதாயும், தீமை செய்தோருக்கு தீமை செய்வதில்லை என்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். அறிவைத் தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான்.* சகோதரனின் வியாபாரத்தைப் போட்டியிட்டுக் கொண்டு கெடுக்காதீர்கள்.- நபிகள்நாயகம்