கணக்கு கேட்பான் இறைவன்
* எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.* உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு. மேலும், வறியவருக்கும், பயணிக்கும் வழங்கிவிடுங்கள்.* தனிமனிதனின் உரிமைகளை பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவராவர்.* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல, அன்பு அனைவர் மீதும் செலுத்தப் படுவதாகும்.* உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் இறைவன் உங்களிடம் அவை பற்றிக் கணக்கு கேட்பான்.-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து