உள்ளூர் செய்திகள்

இறைவன் கருணையுள்ளவன்

* எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.* உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்து கொள்ள சான்று வேண்டுமாயின்)* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து