பதவி தானாகவே வரட்டும்!
* உங்களில் சிலருக்கு, வேறு சிலரை விட உயர்ந்த படித்தரங்களை அவன் (இறைவன்) வழங்கியிருக்கிறான். * இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.* எவரிடத்தும் எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால், அவர் சுவனம் (சொர்க்கம்) செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.* எவருக்கும் உரிமை இல்லாத நிலத்தை, எவர் உழுது பயிரிடுகிறாரோ அந்நிலத்தின் மீது அவருக்கே அதிக உரிமை உண்டு.* எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ, அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.* மனிதர்களில் சிறந்தவர்கள், பதவி தானாகவே அவர்களை வந்தடையும் வரை அதனை அறவே விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து