சாந்த குணத்துடன் வாழ்வோம்
UPDATED : ஆக 19, 2012 | ADDED : ஆக 19, 2012
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதன் ஆக மாட்டான்.* சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.* அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கின்றது.* எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகளாகும்.* எல்லாவிதமான அடக்கமுடைய செயல்களும் சிறந்தவைகளே.* எவன் சாந்தகுணத்தைப் பெற்றிருக்கிறானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். அவர்களை ஒதுக்கித் தள்ளாதீர்கள்.* பேராசை வறுமையைக் குறிக்கின்றது. அவாவின்மை செல்வத்தைக் குறிக்கின்றது.* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள் உணவிலிருந்து கையை எடுத்து விடாதீர்கள்.- நபிகள் நாயகம்