உள்ளூர் செய்திகள்

மனிதர்களை நேசியுங்கள்

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவராவர்.* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.* எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.* ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து