உள்ளூர் செய்திகள்

சாந்த குணம் வேண்டும்

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான்.* வாங்கும்போதும் விற்கும்போதும் சாந்தகுணத்தைக் கடைபிடிப்பவர் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்.* உழைப்பாளிகளின் கூலியை கால தாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்களாகும்.* நீங்கள் பொய் சத்தியம் செய்து ஒரு பொருளை விற்பனை செய்த போதிலும் அது அபிவிருத்தியை கெடுத்து விடுகின்றது.* நீங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பை கோருங்கள். நான் ஒரு நாளைக்கு நூறு முறை மன்னிப்பைக் கோருகிறேன்.* இறைவன் பெருந்தன்மை மிகுந்த அருளாளன். தண்டிக்கும் ஆற்றல் இருந்தாலும் குற்றங்களை மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவன்.- நபிகள் நாயகம்