தர்மத்தால் செல்வம் குறையாது
UPDATED : செப் 26, 2012 | ADDED : செப் 26, 2012
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். * பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். * தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.- நபிகள் நாயகம்