உள்ளூர் செய்திகள்

செலவில் யாருக்கு முதலிடம்?

* பெரும் பாவியைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாகச் செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.* உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை. * ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.* உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் அளவு முறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. புத்திக்கூர்மையாக இருப்பதும் புத்திக்குறைவாக இருப்பதும் கூட.* எவர் தமது குடும்பத்தின் நன்மையை கருதி செலவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் தருமத்தின் நன்மையை அளிக்கின்றான்.* அடிமை, ஏழைக்கு தானம் அளிப்பதை விட அதிகமான நன்மை மனைவிக்கு செலவு செய்வதில் உண்டு. முதலில் நமது குடும்பத்தினருக்குச் செலவு செய்வது தான் கடமை. -நபிகள் நாயகம்