ஒழுக்கத்தைப் பேணுவோம்
UPDATED : அக் 10, 2013 | ADDED : அக் 10, 2013
* கடவுள் நமக்குள் இருந்து கொண்டு, நாம் செய்வது அனைத்தையும் ஓயாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். * மறைவில் இருந்தபடி பாவம் செய்தால் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது அறிவீனம். பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.* அசைவற்ற தீபம் போன்று, மனம் சலனமில்லாமல் அமைதியுடன் இருத்தல் வேண்டும்.* உள்ளத்தில் தீய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே. சிறு தீப்பொறி பெரிய காட்டுத்தீயாக மாறி உன்னையே அழித்து விடும்.* இயற்கையான சந்திரனும், சூரியனும் காலம் தவறாமல் ஒழுங்காகச் செயலாற்றுகிறது. ஆனால், பகுத்தறிவு இருந்தும் மனிதன் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு வாழ மறுக்கிறான்.* மனம் தூய்மை அடைந்தால் மட்டுமே தெய்வசக்தியை உணர முடியும்.- சாந்தானந்தர்