உள்ளூர் செய்திகள்

யார் சிறந்த அறிவாளி?

* சொர்க்கமும் நரகமும் நம் மனதிற்கு உள்ளே தான் இருக்கிறது.* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையானவர்.* ஒருபோதும் கர்வம் கொள்ளக்கூடாது. உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர். பிறரைக் கீழானவர்களாக கருதுபவன் தானே கீழ்நிலை அடைவான்.* எவனொருவன் பிறரை சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.* கோபத்தினால் பிறரைக் குறை கூறித் திரிபவர்கள் தங்களின் முட்டாள்தனத்தை உணர்வதில்லை.* மனத்தூய்மை மிக்க நல்லவர்களோடு உறவாடுங்கள். அதன் மூலம் நாமும் தூய்மை பெற முடியும்.* உறுதியான மனோதிடம், தூயபக்தி, வைராக்ய சிந்தனை கொண்டவர்கள் கடவுளைக் காணும் பேறு பெறுகிறார்கள்.* மனதில் வெறுப்புணர்விற்கு இடம் கொடுக்காதீர்கள். பிறர் மீது வெறுப்பு காட்டினால் கடவுளே நம்மை வெறுத்து விடுவார்.- சாந்தானந்தர்