அவன் இருக்க பயம் எதற்கு?
* இறைவனிடம் மனஅமைதி தந்தருளும்படி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். படிப்படியாக அமைதி பெறுவதை உணர்வீர்கள்.* தினமும் கடவுளை வணங்குபவனின் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தெய்வீகம் வெளிப்படும். நாளடைவில் அவன் தெய்வத்திற்கு ஈடானவனாக மாறிவிடுவான்.* கடவுள் அனைவருக்கும் சொந்தமானவராக இருந்தாலும், தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்கள் மட்டுமே அவருடைய தரிசனத்தைப் பெற முடியும்.* வாழ்வில் துன்பம் நேரும் சமயத்தில் தனிமையான இடத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது மனச்சுமை நீங்கி சுதந்திரக் காற்று வீசுவதை உணரலாம்.* கடவுளை சரணடைந்த பின் பொய் புரட்டுக்கு வேலையின்றி போய்விடும். தீயகுணங்கள் நீங்கிவிடும்.* பிரார்த்தனை செய்பவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களால் சோர்வடைய மாட்டார்கள்.* வாழ்வில் ஒரு முறையாவது பிரார்த்தனையில் ஈடுபட்டவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் மனதில் தைரியம் குடிகொண்டிருக்கும்.- சாரதாதேவியார்