கஞ்சனாக இருப்பது கூடாது
UPDATED : ஜூன் 21, 2017 | ADDED : ஜூன் 21, 2017
* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பெரும்பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.* மனதை துாய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம். * பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக இருப்பது கூடாது.ஷீரடி பாபா