மனநிறைவுடன் வாழுங்கள்
UPDATED : மார் 20, 2016 | ADDED : மார் 20, 2016
* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக கூடாது.* மனதை தூய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.-ஷீரடி பாபா