சாந்தமாகப் பேசுங்கள்
UPDATED : செப் 20, 2016 | ADDED : செப் 20, 2016
* ஒருவர் உதவி கேட்டு வந்தால், உங்களிடம் பொருள் இல்லா விட்டாலும் கோபப்படாதீர்கள். உங்கள் நிலையை அமைதியாக எடுத்துச் சொல்லி அனுப்பி வையுங்கள்.* தத்துவ உபதேசம் கேட்பதைக் காட்டிலும் மனதை சுத்தமாக வைத்திருப்பதே மேலான செயலாகும்.* பழுத்த மரம் கனிகளை வாரி வழங்குவது போல, பணம் படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு தானம் செய்வது சிறந்தது.* வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்.- ஷீரடி பாபா